ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணமடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதைத்தொடர்ந்து அங்கு அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா கதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
இந்த தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.