அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளும் வகையில் பாதுகாப்புப் படையினருடன், தில்லி காவல்துறையினரும் இணைந்து உச்ச நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.