கொல்கத்தா: புல்புல் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான கொல்கத்தாவில், புயல் காரணமாக 12 மணி நேரங்களுக்கு விமானச் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் - வங்கதேசத்துக்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.