தீவிரமடைந்த புல்புல் புயல்: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து

புல்புல் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
cyclone Bulbul: Kolkata airport shutdown
cyclone Bulbul: Kolkata airport shutdown

கொல்கத்தா: புல்புல் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.

மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான கொல்கத்தாவில், புயல் காரணமாக 12 மணி நேரங்களுக்கு விமானச் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் - வங்கதேசத்துக்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com