அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைஸி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
உண்மையை ஓரம்கட்டிவிட்டு, வெறும் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள ஓவைஸி, எங்களுக்குத் தேவை நீதி, வெறும் ஐந்து ஏக்கர் நிலமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.