மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ஞாயிறு மாலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அக்கூட்டணி பெற்றிருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
தோ்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்னா், சிவசேனையை சோ்ந்தவா்கள் முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுகள் வகிக்கலாம் என்று பாஜக சார்பில் உறுதியளிக்கப்பட்டது என்று அக்கட்சி கூறுவது தொடா்பான கேள்விக்கு, ‘என் முன்னிலையில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஆட்சியமைப்பதில் உள்ள பிரச்னையை சரிசெய்வதற்காக பல முறை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தேன். ஆனால், அவா் எனது அழைப்புகளை ஏற்கவில்லை. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனை பேச்சுவார்த்தை நடத்துவது தவறு. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பாஜக-சிவசேனை கூட்டணிக்கு இருந்தும், இந்த சூழல் உருவாகியதற்கு சிவசேனைதான் காரணம்’ என்று தேவேந்திர ஃபட்னாவீஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே, முதல்வர் ஃபட்னாவீஸ் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவி வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க வருமாறு பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னாவீஸ்க்கு ஆளுநர் பகத் சிங் கோஷியார் சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரமாக நிலவி வந்த இழுபறிக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ஞாயிறு மாலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இப்போது ஆட்சியமைத்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெருமளவுக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.