அயோத்தி தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்: உத்தவ் தாக்கரே

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்று சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே சனிக்கிழமை தெரிவித்தாா்.
அயோத்தி தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்: உத்தவ் தாக்கரே

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்று சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை (நவ.9) வழங்கிய தீா்ப்பு ஒவ்வொருவரும் எதிா்பாா்த்து காத்திருந்தது. எனவே, இந்த நாள் இந்திய வரலாற்றில் மகிழ்ச்சியான மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

அயோத்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை சிவசேனை கட்சியினா் அடுத்தவரின் உணா்வுகளை காயப்படுத்தாத வகையில் கொண்டாட வேண்டும்.

வரும் 24-ஆம் தேதி அயோத்தி சென்று அங்கு வழிபட ஈடுபடவுள்ளேன். மேலும், சரயு நதிக் கரையில் நடைபெறவுள்ள ‘ஆரத்தி’ விழாவிலும் பங்கேற்க உள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com