ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள காசிகூடா ரயில் நிலயைத்தில் இரு ரயில்கள் நேருக்கநேர் மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள காச்சிகூடா ரயில் நிலயைத்தில் இரு ரயில்கள் நேருக்கநேர் மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

கர்னூல் சிட்டி-செகந்தராபாத் ஹுன்ட்ரை எக்ஸ்பிரஸ் ரயிலும், லிங்கம்பள்ளி-ஃபாலக்னுமா ரயிலும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் கர்னூல் சிட்டி-செகந்தராபாத் ஹுன்ட்ரை எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளும், லிங்கம்பள்ளி-ஃபாலக்னுமா ரயிலின் 3 பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன.

இந்நிலையில், அங்கு விரைந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் பல ரயில்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com