ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 500 அடி பள்ளத்தில் பயணிகள் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானார்கள்.
ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தின் மர்மட் பகுதியில் பயணிகள் வாகனம் ஒன்று செவ்வாயன்று சென்று கொண்டிருந்தது. மதியம் 3.25 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது , அருகில் உள்ள 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.