ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

பூஞ்ச் மாவட்டத்தில் 4 சிறிய ரக பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 1 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனா். அதுமட்டுமல்லாமல் பூஞ்ச் மாவட்டத்தில் 4 சிறிய ரக பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com