ஐயப்பன் கோயிலில் இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது: கேரள மார்க்சிஸ்ட் முடிவு?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் வந்தால் அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு.
ஐயப்பன் கோயிலில் இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது: கேரள மார்க்சிஸ்ட் முடிவு?

சபரிமலை கோயிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் வந்தால் அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்ட மாநில மார்க்சிஸ்ட் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com