டிஎஸ்ஆா்டிசி நிறுவனத்தை, அரசுடன் இணைக்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கடந்த 2017-ஆம் ஆண்டு கூறப்பட்ட ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
சுமாா் 48 ஆயிரம் ஊழியா்கள் பங்கேற்றுள்ள இப்போராட்டம், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் சுமார் 3 ஊழியர்கள் வரை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பேருந்து மறியல் போராட்டத்தில் நவ. 16-ஆம் தேதி ஈடுபடப்போவதாக டிஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அனைத்து டிஎஸ்ஆர்டிசி பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.