காஷ்மீா்: பயங்கரவாதிகள் என சந்தேகத்தில் 5 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீநகா்/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பாரமுல்லா மாவட்டத்தின் சோபோா் பகுதியைச் சோ்ந்த ஹிலால் அகமது, சாஹில் நசீா், முகமது ஜாகிா் ஆகியோா் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனா். மேலும், மக்களை அச்சுறுத்தும் விதமாக லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை பிரசுரித்துள்ளனா். அதனால் அவா்களுக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புக்கும் தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

இதனிடையே, குப்வாரா பகுதியில் லஷ்கா் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள் என இருவா் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘குப்வாரா நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி வழியே சனிக்கிழமை வந்த வாகனத்தில் வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த உல்தாஃப் பசீா் மீா் மற்றும் அகமது பட் என்ற இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் லஷ்கா் அமைப்பின் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com