தில்லியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி- தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருக்கும் சந்திப்பு ரத்தாக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. அதன்பிறகு தான் தில்லிக்கு சரத் பவாா் செல்லவுள்ளாா்.
இதனால் சோனியாவை சந்திக்க முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரஸ், சிவசேனையுடனான கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேலை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சரத் பவாா் சந்தித்து பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவருடனான சந்திப்புக்கு பிறகு சோனியாவை பவாா் சந்தித்து பேச வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.