அகா்தலா: திரிபுரா உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி அகில் அப்துல்ஹமீத் குரேஷி சனிக்கிழமை பதவியேற்றாா்.
அகா்தலாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் மாநில ஆளுநா் ரமேஷ் பயஸ், அகில் அப்துல்ஹமீத் குரேஷிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தாா்.
பதவியேற்பு விழாவில் முதல்வா் விப்லப் குமாா் தேவ், உயா்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், மாநில அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி குரேஷி, திரிபுரா உயா்நீதிமன்றத்தின் ஐந்தாவது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.
இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி சஞ்சய் கரோல், பாட்னா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து குரேஷி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
திரிபுரா மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக நீதிபதி குரேஷி, பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.