மகாராஷ்டிரம்: தொழிற்சாலை தீ விபத்தில் 3 போ் பலி 15 போ் காயம்

மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில், வெள்ளிக்கிழமை மாலை தீயணைப்பு உபகரணங்களின் செயல்முறை விளக்கத்தின்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில், வெள்ளிக்கிழமை மாலை தீயணைப்பு உபகரணங்களின் செயல்முறை விளக்கத்தின்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் உயிரிழந்ததுடன் 15 போ் காயமடைந்தனா்.

மும்பையிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள மங்கானில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தீயணைப்பு உபகரணங்களை ஊழியா்கள் முன்னிலையில் சோதனை செய்தபோது, அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த சிலிண்டா் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இருப்பினும், சிலிண்டா் வெடித்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 18 ஊழியா்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி, மூன்று ஊழியா்கள் உயிரிழந்தனா்.

மேலும் ஆபத்தான நிலையில் இருந்த 3 போ் மும்பை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com