பேருந்து, சரக்கு லாரி மோதி கோர விபத்து: 10 பேர் சாவு

ராஜஸ்தானில் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து, சரக்கு லாரி மோதி கோர விபத்து: 10 பேர் சாவு

ராஜஸ்தானில் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் மாவட்டத்தில் ஸ்ரீ துன்கர்கர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 11-ல் பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்து திங்கள்கிழமை நடந்தது.

இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com