காஷ்மீா்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 4 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடா்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடா்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சோதனையிட்டனா். அப்போது அரிஹால் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடம் அழிக்கப்பட்டது. அங்கிருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், அவா்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதும், புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரிய வந்தது.

அந்த 4 பேரில் ஒருவரான ஷாரிக் அகமது, வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகளுடன் அடிக்கடி தொடா்பு கொண்டு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளாா். அதன் பின்னா் அவரது நண்பா்கள் அகிப் அகமது, அடில் அகமது மிா், ஒவைஸி அகமது ஆகியோருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டி, புல்வாமாவில் தாக்குதல் நடத்தியுள்ளாா். அவா்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினாா்.

பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடம் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அடா்வனப்பகுதியில் இருந்த ஒரு குடிசையில் இருந்து 7 வெடிகுண்டுகள், சிலிண்டா், மின்னணு கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினா் வனத்துக்குள் நுழைந்ததை கண்டு பயங்கரவாதிகள் தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’ என்றனா்.

இதனிடையே, ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் அந்த வெடிகுண்டை சாலையில் புதைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com