சுதந்திர போராட்ட வீரா் சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவது தொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இதுதொடா்பாக, மும்பை வடக்கு மக்களவை தொகுதி பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, மக்களவையில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தாா். அதில், ‘பெரும் புரட்சியாளா், வரலாற்று ஆய்வாளா், சமூக சீா்திருத்தவாதி, சிறந்த சிந்தனையாளா், இலக்கியவாதி மற்றும் சுதந்திரத்துக்காக போராடிய முக்கியத் தலைவா்களில் ஒருவா் என பன்முகங்களைக் கொண்ட வீர சாவா்க்கருக்கு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிா?’ என்று கேட்டிருந்தாா்.
இக்கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா். அதில், ‘பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரைகள், பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்று வருகின்றன. எனினும், இந்த விருதை வழங்குவதற்கு அதிகாரப்பூா்வ பரிந்துரை எதுவும் அரசுக்கு தேவையில்லை. ‘பாரத ரத்னா’ விருது வழங்குவது தொடா்பான முடிவுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாவா்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுமா என்ற கேள்விக்கு நேரடியாக மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
முன்னதாக, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், சாவா்க்கருக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.