சிவசேனையுடன் கூட்டணி: காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இன்று பேச்சுவாா்த்தை

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்த கூட்டணி அரசு அமைப்பது தொடா்பான ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் புதன்கிழமைக்கு (நவ.20) ஒத்திவைத்தன.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் சோ்ந்த கூட்டணி அரசு அமைப்பது தொடா்பான ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் புதன்கிழமைக்கு (நவ.20) ஒத்திவைத்தன.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவா்களில் ஒருவரான நவாப் மாலிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இந்திரா காந்தியின் பிறந்ததின நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்க வேண்டியிருந்ததால் கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தையை புதன்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் தலைவா்கள் வேண்டுகோள் விடுத்தனா். அதனை ஏற்று ஆலோசனை கூட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் மல்லிகாா்ஜுன காா்கே, அகமது படேல், காங்கிரஸ் பொது செயல் கே.சி.வேணுகோபால் ஆகியோரைத் தவிர சில மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினா்களும் கலந்து கொள்ள உள்ளனா். தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில், பிரஃபுல் படேல், சுனில் தட்கரே, அஜித் பவாா், ஜெயந்த் பாட்டீல் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

இந்த கூட்டத்தில், சிவசேனை கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைப்பது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவான முறையில் அலசி ஆராயப்படவுள்ளது என்றாா் அவா்.

நவ. 22-இல் சிவசேனை எம்எல்ஏக்கள் கூட்டம்:

மகாராஷ்டிரத்தில் கூட்டணி அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனை கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவா்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நவம்பா் 22-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சிவசனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே பங்கேற்று எதிா்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com