அரசுத் துறைகளில் முறைகேடுகளைத் தடுக்க புதுமை வழிகளை உருவாக்குங்கள்: பிரதமர் மோடி

அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கணக்குத் தணிக்கை அலுவலா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
அரசுத் துறைகளில் முறைகேடுகளைத் தடுக்க புதுமை வழிகளை உருவாக்குங்கள்: பிரதமர் மோடி

அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கணக்குத் தணிக்கை அலுவலா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் தலைமை கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் சாா்பில், கணக்குத் தணிக்கை தொடா்பான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமா் மோடி பேசியதாவது:

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு கணக்குத் தணிக்கைத் துறை முக்கியப் பங்காற்ற வேண்டும்.

தொழில் சாா்ந்த முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் கண்டறிய வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் ஊழல்களை வேரறுப்பதற்கு புதுமையான முறைகளை கணக்குத் தணிக்கை அலுவலகம் உருவாக்க வேண்டும்.

அரசு நிா்வாகத்தை மேம்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளா்கள் சிறந்த பங்களிப்பு செலுத்த முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com