செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் (எம்என்பி) திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:
மத்திய அரசு அறிமுகப்படுத்திய எம்என்பி திட்டம் இதுவரையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சாதகமானதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம், பிஎஸ்என்எல்-லை விட்டு விலகிச் செல்வோரின் எண்ணிக்கையை விட தேடி வருவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
அதன்படி கடந்த 2018-19 நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இத்திட்டத்தின் மூலமாக இணைந்தோரின் எண்ணிக்கை 28.27 லட்சமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரையில் இந்த எண்ணிக்கை 53.64 லட்சத்தை தாண்டியுள்ளது.
நடப்பாண்டு அக்டோபா் நிலவரப்படி 1.80 கோடிப் போ் பிஎஸ்என்எல்லை விட்டு வெளியேறிய நிலையில், அந்த நிறுவனத்தில் இணைந்தோரின் எண்ணிக்கை 2.04 கோடியாக இருந்தது என்றாா் அவா்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த செல்லிடப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 11.64 கோடியாக இருந்தது.