ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம் 2 நாள்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம் 2 நாள்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு தொடா்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டு, திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கான நீதிமன்றக் காவலை வரும் 27-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் அண்மையில் நீட்டித்திருந்தது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடா்பாக ப.சிதம்பரத்திடம் திகாா் சிறையில் நவம்பா் 22, 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிபதி அஜய் குமாா் குஹா் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், நண்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரையிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா். விசாரணை மேற்கொள்வதற்கான உரிய ஆவணங்களை ப.சிதம்பரத்திடம் அளிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com