மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை அவரது இல்லத்தில் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
அப்போது விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது,
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சந்தித்து, பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஆதராம் வழங்குவது மற்றும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இதையடுத்து பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தலைமைச் செயலர் மற்றும் நிதிச் செயலருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றிருந்தது.