
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டிற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
இந்தியாவின் காா்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை புதன்கிழமை காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் ஆகும்.
புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு 1,625 கிலோ எடை கொண்ட இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவ உள்ளது.
இந்நிலையில், நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டிற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.