திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலருமான பிரியங்கா வதேரா ஆகியோர் புதன்கிழமை சந்தித்தனர்.

முன்னதாக, தில்லி திகாா் சிறையில் ப.சிதம்பரத்தை சசி தரூா், மணீஷ் திவாரி ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அவா்களுடன், ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரமும் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com