மகாராஷ்டிரத்தில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

பல்வேறு அரசியல் குழப்பங்களால் ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.
மகாராஷ்டிரத்தில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பல்வேறு அரசியல் குழப்பங்களால் ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சுப்ரியா சுலே மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்ததன் எதிரொலியாக மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரை வரேவற்று மகிழ்ந்த சரத் பவார் மகள் சுப்ரியா சுலே

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்பகரை ஆளுநா் பகத் சிங் கோஷியாரி நியமித்துள்ளாா். இவர் புதிய எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com