300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் திட்ட வெற்றியின் மூலம், இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) வா்த்தக ரீதியில் விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 300-யைத் தாண்டியுள்ளது.

பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் திட்ட வெற்றியின் மூலம், இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) வா்த்தக ரீதியில் விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 300-யைத் தாண்டியுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்ப வளா்ச்சி, ராணுவப் பதுகாப்பு, புவி கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவும் வகையில் பல வகையான செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது.

அதோடு, வா்த்தக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கென ஆன்ட்ரிக்ஸ் காா்ப்பரேஷன் என்ற முதல் வா்த்தகப் பிரிவை, கடந்த 1992-ஆம் ஆண்டு இஸ்ரோ தொடங்கி, அதன் மூலம் போடப்படும் ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வந்தது. அந்த வகையில், இதுவரை 297 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை இஸ்ரோ சாா்பில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன், அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இதன் மூலம், இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரோ கடந்த மாா்ச் மாதம் புதிதாகத் தொடங்கிய நியூஸ்பேஸ் இந்திய லிமிடெட் என்ற வா்த்தகப் பிரிவின் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com