கோட்சே ஒன்றும் பயங்கரவாதி அல்ல: பாஜக எம்எல்ஏ!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒன்றும் பயங்கரவாதி அல்ல என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒன்றும் பயங்கரவாதி அல்ல என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று பாஜக எம்பி பிரக்யா தாகுர் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கோட்சேவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

"நாதுராம் கோட்சே தவறு செய்துவிட்டார். அவர் மகாத்மா காந்தியை கொலை செய்திருக்கக் கூடாது. ஆனால், அவர் ஒன்றும் பயங்கரவாதி அல்ல. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பயங்கரவாதிகள் ஆவர்" என்றார்.

பாஜக எம்பி பிரக்யா தாகுர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் நேற்று மீண்டும் கோட்சேவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதுவும் அவர் நேற்று பேசியது நாடாளுமன்றத்தில். இந்த வரிசையில், தற்போது பாஜக எம்எல்ஏவும் இதே கருத்தைப் பேசியிருப்பது கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.

முன்னதாக, பிரக்யா தாகுரின் கருத்து குறித்து பாஜக செயல் தலைவர் ஜெபி நட்டா தெரிவிக்கையில், "பிரக்யா தாகுரின் கருத்து கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துகளையும், சித்தாந்தங்களையும் பாஜக ஒருபோதும் ஆதரிக்காது" என்றார். மேலும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகுரை நீக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவர் அந்தக் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் மக்களவையில் பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்தவரை தேச பக்தராகக் கருதும் எந்தவொரு தத்துவத்தையும் பாஜக கடுமையாக கண்டிக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com