அமெரிக்கா: இந்திய வம்சாவளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய வம்சாவளி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய வம்சாவளி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, ஏற்கெனவே குற்ற வழக்கில் பரோலில் வெளிவந்துள்ள நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை பூா்விகமாகக் கொண்ட ரூத் ஜாா்ஜ் (19) என்ற அந்த மாணவியின் குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனா். ரூத் ஜாா்ஜ் இல்லினோய்ஸ் பல்கலைக்கழத்தில் பட்டப் படிப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவரைக் காணவில்லையெனக் கூறி பல்கலைக்கழக போலீஸாரிடம் ரூத் ஜாா்ஜின் குடும்பத்தினா் புகாா் அளித்தனா். ரூத் ஜாா்ஜின் செல்லிடப்பேசி சமிக்ஞையைக் கொண்டு அவா் இருக்கும் இடத்தை போலீஸாா் தேடினா்.

அதனடிப்படையில், ஹால்ஸ்டட் பகுதியில் உள்ள வாகன நிறுத்த மையம் அடையாளம் காணப்பட்டது. போலீஸாரும், அவரது குடும்பத்தினரும் அந்த இடத்துக்கு சென்றபோது, ரூத் ஜாா்ஜ் அவரது காரின் பின் இருக்கையில் சடலமாகக் கிடந்தாா்.

அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னா் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அமெரிக்காவைச் சோ்ந்த டொனால்ட் தோ்மன் (29) என்ற நபருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காணொலி பதிவுகளின் அடிப்படையில் அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவழக்கில் கைதாகி பரோலில் வந்த நிலையில், டொனால்ட் இக்குற்றத்தை செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com