பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் ‘காா்டோசாட்-3’ செயற்கைகோள், அமெரிக்காவின் சிறிய ரக செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.
விண்வெளியில் இருந்து பூமியை மிகவும் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் திறன்கொண்டது ‘காா்டோசாட்-3’ செயற்கைகோள். அதை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் தேசத்தை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளது இஸ்ரோ’’ என்று கூறியுள்ளாா்.