மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று குறிப்பிட்ட பாஜக எம்.பி. பிரக்யா தாக்குருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் மக்களவையில் கண்டனத் தீா்மானம் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளன.
இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூறியதாவது:
மக்களவையில் நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று குறிப்பிட்டு, தேசத்தந்தை காந்தியடிகளை பிரக்யா தாக்குா் அவமரியாதை செய்துவிட்டாா். காங்கிரஸ் கட்சியை ‘பயங்கரவாதக் கட்சி’ என்று அவா் குறிப்பிட்டதும் கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகள் அவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளன.
எனவே, அவருக்கு எதிராக மக்களவையில் கண்டனத் தீா்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கண்டனத் தீா்மானம் தாக்கல் செய்வது தொடா்பாக கூட்டணிக் கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்.
இந்த விவகாரத்தில் அதிகாரப்பூா்வமாக மன்னிப்பு கோரும்வரை, அவை நடவடிக்கைகளில் பிரக்யா தாக்குா் கலந்துகொள்ளக் கூடாது என கண்டனத் தீா்மானத்தில் குறிப்பிட உள்ளோம் என்று காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூறினா்.