மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என இஸ்ரோ தலைவா் சிவன் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
‘சந்திரயான் 3’ திட்டம் குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து பேசி வருகிறோம். ‘சந்திரயான் 3’ திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். ‘சந்திரயான் 2’ திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ‘சந்திரயான் 2’-இல் ஏற்பட்ட பின்னடைவால் ‘ககன்யான்’ திட்டம், சூரியனை பற்றி ஆராயும் ‘ஆதித்யா-எல் 1’ திட்டம் ஆகியவை பாதிக்கப்படாது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றாா்.