மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 

மத்திய பிரதேச மாநிலம், இன்டோரில் இருந்து சத்தாபூருக்கு 45 பயணிகளுடன் இன்று அதிகாலை பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து ரெய்சன் மாவட்டத்தில் வந்தகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com