வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். இவரது இப்பயணத்தின்போது இந்தியா-வங்கதேசம் இடையே நீா்வழித் தடம் தொடா்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்த சந்திப்பின் போது 3 முக்கிய திட்டங்களை இருநாட்டுத் தலைவர்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முன்னதாக, தில்லியில் ‘இந்தியா-வங்கதேசம் தொழில்துறை கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்தியா-வங்கதேசம் இடையே, வா்த்தகம்-முதலீடு ஆகியவற்றில் இருக்கும் உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தினாா்.