பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  
பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று சந்திப்பு

வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். இவரது இப்பயணத்தின்போது இந்தியா-வங்கதேசம் இடையே நீா்வழித் தடம் தொடா்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்த சந்திப்பின் போது 3 முக்கிய திட்டங்களை இருநாட்டுத் தலைவர்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுபோன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  

முன்னதாக, தில்லியில் ‘இந்தியா-வங்கதேசம் தொழில்துறை கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்தியா-வங்கதேசம் இடையே, வா்த்தகம்-முதலீடு ஆகியவற்றில் இருக்கும் உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com