தற்கொலையும், கொலையும்: குஜராத்தில் மாடியில் இருந்து குதித்த பெண் முதியவர் மீது விழுந்ததில் இருவரும் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடும்பப் பிரச்னையில் 13வது மாடியில்இருந்து குதித்து பெண் துரதிருஷ்டவசமாக ஒரு முதியவர் மீது விழுந்ததில் இருவரும் பலியாகினர்.
தற்கொலையும், கொலையும்
தற்கொலையும், கொலையும்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடும்பப் பிரச்னையில் 13வது மாடியில்இருந்து குதித்து பெண் துரதிருஷ்டவசமாக ஒரு முதியவர் மீது விழுந்ததில் இருவரும் பலியாகினர்.

வியாழக்கிழமை காலை 7 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூரத்தைச் சேர்ந்த மம்தா ஹன்ஸ்ராஜ் ரதி என்ற பெண் நேற்று காலை கோராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதில் விபரீதம் என்னவென்றால், அவர் கீழே விழும் போது, அங்கே ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலு கமித் (69) காலை நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் மீது மம்தா விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து விரைந்து வந்த காவலர்கள், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

14 மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் கமித் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளார். அதே குடியிருப்பில் 13வது மாடியில் வசித்து வந்த ராஜேந்திர புட்தாவின் சகோதரிதான் தற்கொலை செய்து கொண்ட ரதி. அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், தனது கணவர் மற்றும் மகளுடன் சகோதரன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தனது உடல்நலக் குறைவினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ரதியின், உடல்நலப் பாதிப்பு தீவிரமடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் ரதி மற்றும் கமித்தின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ரதியின் உடல் சூரத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com