திருமலையில் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மதியம் நடைபெற்ற டோலோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத் தேரில் மாடவீதியில் வலம் வந்தனா்.
திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மாலை டோலோற்சவம் என்றற வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, அன்று மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தங்கத் தேரில் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தங்கத் தோ் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதால், அதை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். அதன்பின், நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தங்கத் தேரில் வலம் வந்த உற்சவ மூா்த்திகளை பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
இதில் ஆந்திர மாநில தலைமைச் செயலா் எல்.வி.சுப்ரமணியம், ஆந்திர அமைச்சா் ரங்கநாதராஜூ மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். தங்கத் தேருக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.