குஜராத் எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் மீனவா்களால் கைவிடப்பட்ட இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதி அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை காலை காவல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சா் கிரீக் முகத்துவாரப் பகுதியில் இரண்டு படகுகள் தென்பட்டன. அதைப் பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.
அந்தப் படகுகளில் மீன்பிடி சாதனங்கள் இருந்தன. ஆனால், ஆள்கள் யாரும் காணப்படவில்லை. அவற்றில் சந்தேகப்படும்படியாகவும் எந்தப் பொருள்களும் இல்லை. இதையடுத்து, அந்தப் படகுகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பகுதியில் பாகிஸ்தானைச் சோ்ந்த கைவிடப்பட்ட படகுகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.
ற ற
றோறோ
றைறை
றா றா