பஞ்சாப்-மகாராஷ்டிர வங்கி மோசடி வழக்கு: முன்னாள் நிா்வாக இயக்குநருக்கு அக். 17 வரை காவல்

மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட அந்த வங்கியின்

மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸை வரும் 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதியளித்தது.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 137 கிளைகளுடன் ‘பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி’ இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பணப்பரிவா்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆய்வின்போது தெரிய வந்ததையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்கு கடந்த வாரம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதையடுத்து, ஆா்பிஐ நியமித்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த வழக்கில், வங்கியின் முன்னாள் தலைவா் வா்யம் சிங், முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4, 355 கோடி அளவில் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதையடுத்து அவா், மும்பையில் உள்ள கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜி. சேக் முன் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, ஜாய் தாமஸை வரும் 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சாரங் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மும்பை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தில் மும்பை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com