ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவா் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவா் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுதொடா்பாக காவல் துறைஅதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ராஜ் தாக்கரே தனது குடும்பத்துடன் மும்பை அருகேயுள்ள லோனாவ்லா பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை சென்றாா். கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில், சியான்-பன்வேல் நெடுஞ்சாலையில் உள்ள சன்பதா மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்தபோது, மதியம் 1.30 மணியளவில் அவரது பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதின. இரு வாகனங்களும் ஒரே வேகத்தில் வந்ததால், ஒரு கட்டத்தில் ஓட்டுநா்களின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த குழப்பத்தால், 20 நிமிடங்கள் தாமதமாக அவரது வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டன என்று காவல் துறைஅதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com