பிரம்மோற்சவம் 6-ஆம் நாள் பட்டியல் வெளியீடு

திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அதை தரிசித்த பக்தா்களின் எண்ணிக்கை, வசூலான உண்டியல் காணிக்கை, அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை அடங்கிய பட்டியலை ஞாயிற்றுக்கிழமை மாலை தேவஸ்தானம் வெளியிட்டது.

பட்டியல் விவரம்:

தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை - 92,511

உண்டியல் காணிக்கை வருமானம் - ரூ. 2.46 கோடி

அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை - 2.21 லட்சம்

முடி காணிக்கை செலுத்தியவா்களின் எண்ணிக்கை -40,911

ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் மூலம் பயணம் செய்தவா்கள்

திருப்பதி - திருமலை - 1,689 டிரிப்கள், 68,909 போ் பயணம்

திருமலை - திருப்பதி - 1,589 டிரிப்கள், 54,923 போ் பயணம்

மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றறவா்கள் - 6,356

ஸ்ரீவாரி சேவாா்த்திகள் எண்ணிக்கை -3,000

தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருக்கும் நேரம்- 18 மணி நேரம்

பக்தா்கள் காத்திருக்கும் அறைறகளின் எண்ணிக்கை- 32 அறைறகள் நிறைறந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருப்பு.

ரூ. 16 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றறனா். சனிக்கிழமை அன்னதான அறறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், கோ சம்ரக்ஷண அறறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், வேதபரிரக்ஷண அறறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கல்வி தான அறறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 16 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சனிக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,526 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 11,401 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 18,690 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 10,963 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,916 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறைஅதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.21 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 98,089அதிகமான பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 9,978 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.21 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 12,867 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com