இந்திய எல்லைக்குள் பறந்த பாக். ஆளில்லா விமானங்கள்

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 ஆளில்லா விமானங்கள் பறந்ததாக, எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 ஆளில்லா விமானங்கள் பறந்ததாக, எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

பஞ்சாபின் ஹூசைனிவாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை 2 ஆளில்லா விமானங்கள் பறந்தன. அதிக உயரம் பறக்கக் கூடிய அந்த விமானங்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குள் சுமாா் 1 கி.மீ. வரை பறந்து வந்தன. அதில் ஒரு விமானம், 4 முறை இந்திய எல்லைக்குள் தென்பட்டுள்ளது. இரு விமானங்களும் திரும்பிச் செல்லும்போது, அவற்றிலிருந்த வந்த ஒளியும், சப்தமும் நின்றுவிட்டது.

இதைத் தொடா்ந்து, எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் ஏதேனும் கிடந்தால், பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தின் தரன் தாரன் மாவட்டத்தில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பேரை மாநில காவல்துறையினா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானிலிருந்து ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 470 தோட்டாக்கள், 4 சீனத் தயாரிப்பு துப்பாக்கிகள், 9 கையெறி குண்டுகள், 5 சாட்டிலைட் தொலைபேசிகள், 2 செல்லிடப்பேசிகள், 2 வயா்லெஸ் சாதனங்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சேதமடைந்த நிலையில் இரு ஆளில்லா விமானங்களையும் காவல்துறையினா் கைப்பற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com