ஜம்மு-காஷ்மீா் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகளிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு செவ்வாய்க்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினா்.
அதையடுத்து இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள், காஷ்மீரைச் சோ்ந்த ஃபரூக் லோனி மற்றும் அப்பாஸ் பட் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவா்கள் இருவரும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஃபரூக் லோனி என்பவா் பொதுமக்கள் மற்றும் போலீஸாா் மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டிருந்த நிலையில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அந்த பகுதிகளில், வா்த்தக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் கடைகளை திறக்கக் கூடாது என்று அவற்றின் உரிமையாளா்களை லோனி அச்சுறுத்தி வந்தாா் என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறினாா்.