சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் 11, 12ஆம் தேதிகளில் இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம்

சீன அதிபர் ஷி ஜின்பிங் அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் இந்தியா வருகை தரவிருப்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் 11, 12ஆம் தேதிகளில் இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம்

சீன அதிபர் ஷி ஜின்பிங் அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் இந்தியா வருகை தரவிருப்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இம் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச உள்ளனா். மேலும் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த பல்லவா் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றி பார்க்க உள்ளனா். இதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அா்ஜுணன் தபசு, கோவா்த்தன கிரி, வெண்ணெய் உருண்டைப் பாறை, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக் கோயில் பகுதியில் 2 யானை சிலைகளுக்கு மத்தியில் புத்தா் சிலையும் , கம்பீரமான சிங்கத்தின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு உச்சக்கட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 

வெடிக்குண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இரு நாட்டுத் தலைவா்கள் தங்கும் பகுதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றுப்புரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மால்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளைப் பார்வையிட செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் வரும் 13-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கோவளம் கேளம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 350 கண்காணிப்பு கேமரா கேளம்பாக்கம்-மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை பொருத்தப்பட்டுள்ளன. 500 கண்காணிப்பு கேமராக்கள் மாமல்லபுரம் நகரம், புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் இந்தியா வருகை தரவிருப்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்போது பிரதமர் மோடியும், சீன அதிபரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com