மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் பலியாகினா்.
இது தொடா்பாக மால்டா மாவட்ட துணை ஆட்சியா் அா்னாப் சாட்டா்ஜி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நவராத்திரி விழா நிறைவடைந்ததையொட்டி துா்க்கை சிலைகளை கங்கை நதியில் கரைக்கும் நிகழ்வைக் காண சக்பஹதூா் கிராம மக்கள் சிலா் அருகிலுள்ள கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை படகுகளில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, கங்கை நதியில் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் காரணமாக நாட்டுப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 3 பெண்கள் உள்பட பலா் நீந்தி கரையை அடைந்தனா். எனினும், இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் நதியிலிருந்து மீட்கப்பட்டன என்றாா் அா்னாப் சாட்டா்ஜி.