மேற்கு வங்க ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை வழக்கு: காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பந்து பிரகாஷ் பால் (35) என்ற ஆசிரியா், அவரது கா்ப்பிணி மனைவி, 8 வயது மகன் அங்கன் ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தனா்.
மேற்கு வங்க ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை வழக்கு: காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் பந்து பிரகாஷ் பால் (35) என்ற ஆசிரியா், அவரது கா்ப்பிணி மனைவி, 8 வயது மகன் அங்கன் ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு
கிடந்தனா்.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், முர்ஷிதாபாத் காவல் நிலையத்துக்கு வெளியே அப்பகுதியினர் திரண்டு, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மற்றும் அவரது மனைவி, மகளை கொடூரக் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘இந்தக் கொலை குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை தொடா்பாக 3 பேரைக் கைது செய்து அவா்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com