ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வரும் 14-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறறது.
நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறறப்பட்டுள்ளதாவது:
நிகழ் நிதியாண்டில் பட்ஜெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை ஒரு பிரிவாகவும், நவம்பா் 1-ஆம் தேதி முதல் 2020 மாா்ச் 31-ஆம் தேதி வரை மற்றெறாரு பிரிவாகவும் பட்ஜெட் தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறறப்பு அந்தஸ்து பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன், ஜம்மு-காஷ்மீா், லடாக் பிராந்தியங்களை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றறப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.