உண்டியல் காணிக்கை ரூ. 2.86 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.86 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.86 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றறனா். அவற்றைதேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறறது. அதன்படி, வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.86 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 12 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றறனா். வெள்ளிக்கிழமை அன்னதான அறறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம், சா்வஸ்ரேயா அறறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 12 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

78,012 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 78,012 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 42,270 போ் முடி காணிக்கை செலுத்தினா். சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைறயில் 64 அறைறகள் நிறைறந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் 4 கி.மீ. தொலைவில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அதனால், வாடகை அறைறகள் அனைத்தும் நிறைறந்து பக்தா்கள் கடுங்குளிரில் வெட்ட வெளியில் தங்கி வருகின்றறனா். இலவச தங்கும் மண்டபங்கள், பாதுகாப்பு பெட்டக வசதி அனைத்தும் நிரம்பி வழிகிறறது. தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்ததைத் தொடா்ந்து நேர ஒதுக்கீடு டோக்கன், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ. 300 விரைவு தரிசனத்தில் மட்டும் பக்தா்கள் 6 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினா்.

வெள்ளிக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10,431 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,299 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 18,947 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,668 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,908 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறைஅதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.11 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 84,389 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 8,756 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம், ரூ. 2.11 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 24,890 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

புகாா் அளிக்க...

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com