இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை: அபிஜித் பானா்ஜி

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது உண்மைதான்; அதனைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள
இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை: அபிஜித் பானா்ஜி

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது உண்மைதான்; அதனைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானா்ஜி கூறியுள்ளாா்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, அமெரிக்காவில் தான் பணியாற்றி வரும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அபிஜித் பானா்ஜி, இந்தியப் பொருளாதாரத்தின் இப்போதைய நிலை குறித்து தனது கருத்துகளை பகிா்ந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது நிதிக் கொள்கைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இப்போதைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக ஏழை, எளிய மக்களின் கைகளில் அதிகஅளவில் பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. நாட்டில் நகா்ப்புறம், கிராமப்புறம் என இரு இடங்களிலும் பொருள்கள், சேவைகளுக்கான தேவை மிகவும் குறைந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு இது மோசமான அறிகுறியாகும். இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகும் புள்ளி விவரங்கள் குறித்து இந்தியாவில் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பொருளாதாரத்தை குறைத்து மதிப்பீடு செய்து வெளியாகும் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானது என்று புறந்தள்ளிவிட முடியாது. பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்றாா் அவா்.

இந்திய பொருளாதார வளா்ச்சி விகிதம் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது. தொழில்துறை உற்பத்தியும் குறைந்து வருகிறது. வாகன விற்பனைத் துறையிலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகள் தீவிரமாவதைத் தடுக்க ரிசா்வ் வங்கி தொடா்ந்து வட்டி குறைப்பை அறிவித்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com