உத்தரப் பிரதேச மாநிலம், லக்ளெவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி (45) படுகொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘லக்ளெனவின் குா்ஷெத் பாக் பகுதியிலுள்ள தனது வீட்டில் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, 3 பேரை தேடி வருகிறோம். அவா்களில் இருவா், முகமது முஃப்தி நயீம் காஸ்மி, இமாம் மெளலானா அன்வருல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது’ என்று தெரிவித்தனா்.
கமலேஷ் திவாரி கொலைக்கு, அகில பாரதிய ஹிந்து மகாசபை கண்டனம் தெரிவித்துள்ளது.