ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிபத்து: குழந்தை உயிரிழப்பு

ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 
ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிபத்து: குழந்தை உயிரிழப்பு

ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

ஐதராபாதித்தில் உள்ள ரென்ஸ் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அங்குள்ள மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட அந்த தீயானது மளமளவென்று பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

காயமுற்ற மேலும் 4 குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com